Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான்: ஐதராபாத்தை வீழ்த்துமா?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (19:40 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 45வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ஐதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய ராஜஸ்தான் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்டன் டர்னர்  ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மீண்டும் இணைந்துள்ளார்.
 
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும். அதேபோல் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் பட்டியலில் இடம்பெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments