Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை கொடுத்த 177 ரன்கள் இலக்கை எட்டுமா பஞ்சாப்?

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (18:35 IST)
ஐபிஎல் போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் போட்டி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தற்போது சண்டிகரில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாகிய ரோஹித் சர்மா மற்றும் டீகாக் நல்ல ஆரம்பத்தை கொடுத்தனர். ரோஹித் 32 ரன்களும், டீகாக் 60 ரன்களும் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா அடித்த அதிரடி 31 ரன்களால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது
 
இந்த நிலையில் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடி வருகின்றனர்
 
மும்பை, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளதால் இன்று வெற்றி அடையும் அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று இரவு எட்டு மணிக்கு டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments