Webdunia - Bharat's app for daily news and videos

Install App

132 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே! மும்பை வெல்லுமா?

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (21:16 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. தல தோனி 37 ரன்களும், ராயுடு 42 ரன்களும், முரளி விஜய் 26 ரன்களும் எடுத்துள்ளனர். 
 
மும்பை தரப்பில் ராகுல் சஹார் இரண்டு விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகிய ஹிட்டர்கள் இருக்கும் நிலையில் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டுமா மும்பை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments