சிஎஸ்கே தோல்விக்கு இவர்தான் காரணமா?

Webdunia
சனி, 12 மே 2018 (13:45 IST)
நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 176 ரன்கள் சேர்த்தது. 
 
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
தற்போது, 11 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 7 வெற்றி என மொத்தம் 14 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது சென்னை அணி. இந்த தோல்விக்கான காரணங்களை கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். 
 
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், என்பதை அறிந்தும் தோனி டாஸில் வென்று முதலில் பேட் செய்தது, இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கொடுக்காதது, பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சொதப்பியது என பல காரணங்கள் கூறப்படுகிறது. 
 
இது குறித்து தோனி கூறியிருப்பதாவது, பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யக்கோரி தெரிவித்த பின்னரும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அதை நிராகரித்துவிட்டார். 
 
நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில்தான் பந்து வீசியிருக்க வேண்டும் அதுதான் திட்டமும் கூட. பவுலர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
 
நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம் எனவே மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments