இளம் வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியா

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (17:25 IST)
பெங்களூருக்கு எதிரான போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த மும்பை வீரர் இஷான் கிஷனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.
 
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
 
இந்த போட்டியின் 13-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்து தூக்கி ஏறிந்த பந்து, மும்பை அணியின் வீக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
இதற்கு வருத்தம் தெரிவித்து ஹர்திக் பாண்டியா தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments