கறிவேப்பிலைக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தனியாக எடுத்துவைத்துவிடுவார்கள். இதனை தவிர்க்க கறிவேப்பிலை குழம்பை சுவையாக செய்து தரலாம்.
தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து, அரைக்க
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
மிளகு -அரை ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6 முதல் 8,
பூண்டு -6 முதல் 8 பல்.
கடுகு, சீரகம், நெய்.
செய்முறை:
புளியைக் கரைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியே சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து, கறிவேப்பிலையை வதக்காமல் சேர்த்து அரைக்கவும்.
புளிக்கரைசலில், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, 1 கப் தண்ணீரும் விட்டு, மிதமான தீயில் மூடி வைத்துத் தளதளவெனக் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.