அரிசியுடன் துவரம் பருப்பு கலந்தால் வித்தியாசமான ஒரு மணத்தோடு, சுவையாகவும் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
துவரம் பருப்பு - 50 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 மூடி
செய்முறை:
புழுங்கல் அரிசியையும், துவரம் பருப்பையும் ஊறவைக்கவும்.
இரண்டையும் வற்றல் மிளகாயோடு சேர்த்து நன்றாக, ரவை பதத்தில் அரைக்கவும்.
இதோடு சீரகமும், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இவற்றை கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.