ஒத்துழையாம ை போராட்டம ் வன்முறையில ் முடிந்தத ை ஏற்றுக்கொள் ள மறுத் த காந்த ி, ஒத்துழையாம ை இயக்கத்த ை கைவிடுவதா க அறிவித்தத ு மட்டுமின்ற ி, மக்கள ் இயக்கம ் நிறுத்தப்ப ட வேண்டும ் என்ற ு கூற ி உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்டார ்.
சட் ட மறுப்ப ு இயக்கம ்
இந்தி ய அரசமைப்ப ை உருவாக் க பிரிட்டிஷ ் அரச ு அமைத் த சைமன ் ஆணையத்த ை எதிர்த் த மகாத்ம ா காந்த ி, 1930 ஆம ் ஆண்ட ு சட் ட மறுப்ப ு இயக்கத்த ை துவக்கினார ்.
65 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட ் 9 ஆம ் தேத ி நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவர, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்து இறுதிகட்டப் போராட்டத்தைத் துவக்கியது!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிகரமான திருப்புமுனைக்கு வித்திட்டது வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய பல்வேறு போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான் பிரிட்டிஷ் இந்திய அரசை கதிகலங்கச் செய்தது. அமைதி வழியில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
துவக்கத்தில் சாத்வீக வழியில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம்,வெள்ளையனின் அடக்குமுறையின் விளைவாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. உண்மையில் இப்போராட்டம் வன்முறைப் பாதையில் அடியெடுத்து வைத்தபோதுதான் வெள்ளைய அரசு தங்களுடைய ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டபட்டுவிட்டது என்பதனை உணர்ந்தது என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.