நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்.
அவைகளைக் கூட்டிக் கொண்டு தினமும் வெளியில் செல்வதால் நடைப்பயிற்சியும் செய்தது போல் ஆகும்.
அவற்றின் சுகாதாரமும் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் சுகாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும். எனவே அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவற்றிற்கான தடுப்பூசிகள், மருந்துகளை தவறாமல் போடுங்கள்.
எப்போது அவைகளுடன் விளையாடினாலும் உடனடியாக கை, கால்களை சோப்புப் போட்டு கழுவ வேண்டியது மிகவும் அவசியம்.