குழந்தைப் பேறில் சிக்கல் இருக்கும் தம்பதிகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பிரச்சினைகளுக்கு ஏற்பட சிகிச்சை முறையில் மாற்றம் ஏற்படுகிறது.
மிகவும் பலகீனமான விந்துக்களைக் கொண்டவர்களுக்கு பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதில் சிறுதுளையிட்டு விந்தணுவைச் செலுத்தி கர்ப்பம் தரிக்கச் செய்யப்படும் முறைக்கு ஐசிஎஸ்ஐ இக்ஸி என்று பெயர்.
தற்போது லேசர் மூலமாக கருத்தரிப்பு நடைபெறுகிறது. அதாவது குழந்தைப்பேறுக்கான எந்த சிகிச்சை முறைகளிலும் கரு உருவாகாத தம்பதிகளுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்முறையில் லேசர் உபயோகித்து கருத்தரிப்பு செய்யப்படும். இதில் வெற்றிக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
தற்போது ஏதாவதொரு காரணத்தால் குழந்தைப் பேறை தள்ளிப் போட விரும்புபவர்கள், அவர்களது சினை முட்டைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துக் கொண்டு பல ஆண்டுகள் கழித்துக் கூட அதே சினை முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றை அடையலாம்.