ஆரஞ்சு அதாவது காவி நிறத்தில் உள்ள பழங்கள், காய்கறிகளில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.
வயது சார்ந்த பார்வைக் குறைபாட்டைத் தடுக்க இவை உதவுகின்றன. புற்றுநோய் ஆபத்தைத் தடுக்கக் கூடிய சக்தியும் இந்த நிறம் கொண்ட காய்கறி, பழங்களுக்கு உண்டு.
இதுபோன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் உடம்பில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவும்.
மேலும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் ஆரஞ்சு பழம், கேரட், பப்பாளி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த அளவுக் குறையும்.
சிலருக்கு மூட்டுத் தேய்வு, மூட்டு வலி போன்ற உபாதைகள் இருக்கும். அப்படியானவர்களும் காவி நிறத்திலான உணவுப் பொருட்களை உண்டு வந்தால் நல்ல பலன் கிட்டும்.