உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருந்தே தீரும் என்று உறுதியாக சொல்கின்றனர் விஞ்ஞானிகள்.
நம் உடலில் வெப்பம் அதிகமானால் அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக் கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான்.
வியர்வை என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதனுக்கு வெப்பம் தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.
வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும், கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது.
இந்த வியர்வை, சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன.