Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறு குழந்தைகளுக்குப் பிறகு திருமணம் செய்த அபூர்வ ஜோ‌டி

ஆறு குழந்தைகளுக்குப் பிறகு திருமணம் செய்த அபூர்வ ஜோ‌டி
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:32 IST)
அந்த ஜோ‌டி யார் என்பது சொல்லாமலே தொpந்திருக்கும். அவர்கள் ஏஞ்சலினா ஜோ‌லி, பிராட் பிட்.

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்குள்ளும் பற்றிக் கொண்டது. ஜெனிபர் அனிஸ்டனை கழற்றிவிட்டு ஜோ‌லியுடன் சுற்ற ஆரம்பித்தார் பிட். மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளை தத்தெடுத்தார் ஜோ‌லி. மொத்தமாக ஆறு குழந்தைகள்.

குழந்தைகளின் எண்ணிக்கை அரை டஜன் ஆன பிறகே இருவருக்கும் திருமண விஷயம் நினைவுக்கு வந்தது. இதோ அதோ என்று இழுத்தடித்து கடைசியாக சென்ற வாரம் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இரு குழந்தைகள் உடன்வர, இரு குழந்தைகள் பூ தூவ, இரு குழந்தைகள் மோதிரம் எடுத்துத்தர இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றேnர்களின் திருமணத்தைப் பார்க்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil