போரால் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறவர் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென்றே தனி கல்விக்கூடத்தை உருவாக்கியுள்ளார். இதில் 200 க்கும் அதிகமான பெண்கள் படிக்கிறார்கள்.
பெண்கள் படிக்கக் கூடாது மீறினால் தண்டனை என்று கற்கால கொள்கையுடன் செயல்படும் தாலிபன்களின் இடத்தில் இப்படியொரு பள்ளியை ஜோலி திறந்திருப்பது அசாதாரணம். காபூலுக்கு வெளியே போரால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமிருக்கும் இடத்தில் இந்தப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதைப் போல் மேலும் பல பள்ளிகளை ஆப்கானில் திறக்க உள்ளார் ஜோலி.
ஜோலி தானொரு ஹீரோயின் என்பதை சினிமாவுக்கு வெளியே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.