Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்னால்டால் ஆளானேன் - ஸ்டாலோனின் சென்டிமெண்ட்

அர்னால்டால் ஆளானேன் - ஸ்டாலோனின் சென்டிமெண்ட்
, செவ்வாய், 17 ஜூன் 2014 (16:45 IST)
த எக்ஸ்பென்டபிள்ஸ் 3-ல் மூன்றாவது முறையாக சில்வஸ்டர் ஸ்டாலோனும், அர்னால்ட் ஸ்வாஸ்நேகரும் இணைந்துள்ளனர். ஹாலிவுட்டின் எவர்கிரீன் மசில்மேன்கள்.
 
ஒருகாலத்தில் இவர்கள் இருவரையும் சுற்றியே ஆக்ஷன் பட ரசிகர்கள் இயங்கினார்கள். ஸ்டாலோன் ராம்போ, ராக்கி என்று ஒருபக்கம் எதிரிகளை துவசம் செய்ய, கமாண்டோ, பிரிடேட்டர் என்று இன்னொரு பக்கம் அக்ஷனில் ரசிகர்களை சுருட்டிக் கொண்டிருந்தார் அர்னால்ட். யாருடைய பாடி பெஸ்ட் என்று தமிழக கல்லூரிகளில் அர்னால்ட், ஸ்டாலோன் ரசிகர்கள் அடித்துக் கொண்டதுண்டு. அன்று இருவரும் அறிவிக்கப்படாத எதிரிகள்.
காலம் பெரும் ஆசான். ஏறக்குறைய ஒரே நேரத்தில் திரைத்துறையில் நுழைந்த இருவரின் வளர்ச்சியில் மற்றவர்களின் பங்கு கணிசமானது என்பதை புரிய வைத்துள்ளது. எதிரியின் பலத்துக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பத்தானே நம்முடைய பலமும் வளர்ச்சியும் அமையும். அந்தவகையில் அர்னால்டினால்தான் இப்படியொரு நிலைக்கு வந்தேன் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் ஸ்டாலோன். ஸ்டாலோனின் கடின உழைப்புக்குப் பின்னால் அர்னால்டும், அர்னால்டின் உழைப்புக்குப் பின்னால் ஸ்டாலோனும் இருந்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.
 
இந்த உண்மையை புரிந்து கொள்ளும் போதுதான் மசில்மேன்கள் பிரேவ்மேன்களாக மாற்றங்கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil