Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் மற்றும் நந்தியை வழிபடுவது ஏன்...?

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (17:55 IST)
பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில்; அயர்ச்சியில் படுத்து, கண்ணு றங்கியது துவாதசியில்; உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம்.


14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள்.

சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும்.

பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற் றை நைவேத்தியம் செய்யலாம்.

இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும் படி வரம் அருளுவார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன் (18.05.2024)!

முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன் (17.05.2024)!

முட்டுச்சந்தில் விநாயகர் சிலை வைப்பது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments