ராகு காலத்தில் இந்த செய்யக்கூடாது ஏன்...?

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (00:02 IST)
புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான் ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது. அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் சிறப்பு பலன்களை தருகிறது எனப்படுகிறது.
 
 
வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.
 
செவ்வாய் ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும் துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு துர்க்கையை வழிபடுவது நற்பலன்களை தருகின்றன.
 
ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: சவால்களை வென்று சாதனை படைக்கும் ஆண்டு!

கோபம் குறைய வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.. மன அமைதி கிடைக்கும்..!

மேஷம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: துணிச்சலும் வேகமும் நிறைந்த ஆண்டு!

மாதவரம் கரிவரதராஜ பெருமாள்: பாவங்களை போக்கி வரம் அருளும் தேன் உண்ட பெருமாள்!

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 சவரன் எடை கொண்ட தங்க அங்கி.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments