Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:35 IST)
தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன.
 
எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி  வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் ஓரிருவேலைகளில் விளக்கேற்றுவதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
 
விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுவதால், தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
 
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
 
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்றவேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக ஒரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக  வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

இந்த ராசிக்காரர்கள் எதையும் ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (16.03.2025)!

பங்குனி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments