Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு.!!

Senthil Velan
வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:22 IST)
திருமங்கலம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப் பட்ட ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மேல பரங்கிரி பூமி நீளா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. 
 
இந்த கோவிலில் குடமுழுக்கு விழா கிராமப் பொதுமக்கள் சார்பில்,  25 ஆண்டுகளுக்கு பிறகு,  தற்போது வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று, கலசங்களில் வைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களை  பூஜிக்கச் செய்த பின்பு, கோவில் மேல் உள்ள கோபுரத்திற்கு மகா சம்ப்ரோக்ஷணம் செய்தனர்.

ALSO READ: போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!
 
இவ்விழாவில் பேரையூர்,  கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து,  ஏராளமான பக்தர்கள்  தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து,  கிராம பொதுமக்கள் சார்பில் அங்கு கூடி இருந்த 2000 -க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் கோவிலில் தேர்த்திருவிழா.. அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments