Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதமலை மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (21:26 IST)
மருதமலை மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை: அதிரடி அறிவிப்பு
கார்த்திகை தீபத்திருநாள் அன்று மருதமலை கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் திருவண்ணாமலை மற்றும் முருகப்பெருமானின் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் முருகப்பெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றான மருதமலையில் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது 
 
இந்த நிலையில் அன்றைய தினம் மலை அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
டிசம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மலை அடிவாரத்திலிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று பக்தர்கள் மலைக்கோவிலுக்கு தேவஸ்தான பேருந்துகள் மூலம் மட்டும் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? ஆன்மீகவாதிகள் பதில்..!

உங்களுக்கு இந்த மாதத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள் (01.08.2025)!

தஞ்சை மண்டல வைணவ நவகிரக தலங்கள்: ஓர் ஆன்மிக பார்வை..!

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மீனம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – கும்பம்

அடுத்த கட்டுரையில்
Show comments