விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (18:52 IST)
இன்று விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இன்றைய மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார் என்று நம்பப்படுகிறது. 
 
மகா சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், அறியாமல் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.  மகா சிவராத்திரி இரவில் சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் பெற வழி கிடைக்கும் 
 
பக்தர்கள், மகா சிவராத்திரி இரவு முழுவதும் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுவார்கள்.  சிவபெருமானுக்கு பால், தேன், பழங்கள், மலர்கள் போன்றவற்றை அபிஷேகம் செய்து, பூஜை செய்வார்கள். பக்தர்கள், "ஓம் நமசிவாய" மந்திரத்தை மனதுக்குள் கூறி சிவபெருமானின் அருளைப் பெறுவார்கள். 
 
சிவபெருமானை நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்திருப்பார்கள்.  பக்தர்கள், சிவன் கோயில்களுக்கு சென்று, சிவபெருமானை தரிசனம் செய்வார்கள். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments