நப்பின்னை உட்பட எல்லாப் பெண்களும், கண்ணனைப் போற்றிக் துதித்துத் துயில் எழ வேண்டும் பாடல்.
நந்த கோபரிடம் ஏராளமான பசுக்கள் உண்டு. அவ்வளவு பசுக்களும், எவ்வளவு பெரிய பாத்திரங்களை வைத்தாலும், அவை எதிரே பொங்கி வழியும் படியாக, இடைவிடாமல் பாலைச் சொரியக் கூடியவை. வள்ளல் தன்மை மிக்க அப்படிப்பட்ட பசுக்களை, விசேஷமாகப் படைத்துள்ள நந்தகோபரின் மகனே! எழுந்திரு.
எளியவர்களைக் காப்பதில் மன எழுச்சி கொண்டவனே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! இந்த உலகத்தில் தோன்றிய தேஜோ மயமானவனே! பகைவர்கள், உன் எதிரில் நிற்க மாட்டாமல், தங்கள் வலிமை ஒழிந்து, வேறு கதியில்லாமல் உன் திருவடிகளில் வந்து விழுந்து பணிவதைப் போல, நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து பல்லாண்டு பாடியபடி வந்து சேர்ந்தோம்.