திருப்பரங்குன்றம் தேர்த்திருவிழா.. தேதியை அறிவித்த நிர்வாகிகள்..!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (18:36 IST)
பங்குனி திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருப்பரங்குன்றம் தேர் திருவிழா மிகவும் விசேஷமாக நடக்கும் என்பதை அடுத்து இந்த தேர் திருவிழா ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
தற்போது தேரின் சக்கரங்கள் பொருத்தும் பணி தயாராகி வருவதாகவும் தேரின் அடிப்பாகங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
இரும்பில் ஆன பெரிய சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக், இரும்பிலான பாதுகாப்பு உள் சக்கரங்கள் என அதிநவீனமாக இந்த ஆண்டு தேர்வு திருவிழா நடைபெறும் என்றும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெறும் இந்த மகா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
46 அடி உயரம் 21 அடி அகலம் 21 அடி நீளம் கொண்ட இந்த தேரின் அலங்கார பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

அடுத்த கட்டுரையில்
Show comments