Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா: தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 29 மே 2023 (18:31 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜூன் ஒன்றாம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் அதன் பின் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருநாளில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விசுவரூப தீபாரதனை தொடங்கி சாயரட்சை தீபாரதனை வரை மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக கவனிக்கப்பட்டுள்ளன என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒருநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. என்ன விசேஷம்?

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.06.2025)!

ஒரு ஆண்டில் எத்தனை வாஸ்து நாட்கள் வரும்.. வாஸ்துவின் சிறப்புகள் என்ன?

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்கள் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (03.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments