Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகேஸ்வரசுவாமியை வழிபடும் சூரியன்.. பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!

Mahendran
வியாழன், 24 ஏப்ரல் 2025 (19:23 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இன்று காலை அரிய சூரிய பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. 
 
காலையில் சூரியன் எழுந்த வேளையில், சூரிய ஒளிக்கதிர்கள் நேராக மூலவரான ஸ்ரீ நாகேஸ்வர சுவாமிக்கு மீது வீசும் அபூர்வ தரிசனம் நடந்தது. இதனை காணும் பாக்கியத்திற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
 
இந்தத் திருக்கோயில் பல்லவ சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். புராணக் கதைப்படி, சூரிய பகவான் ஒருகாலையில் தனது பிரகாசத்தை இழந்தபோது, அசரீரியின் வாக்குப்படி இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, நாகேஸ்வரரை வழிபட்டதினால் சாபவிமோசனம் பெற்றார்.  
 
இன்றைய விழாவில், ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி, நடராஜர் மற்றும் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சூரிய பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழா முடிவில் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
 
இந்த நிகழ்வு, பக்தர்களுக்கு ஆன்மீக பூரணத்தையும், அருளும் தரும் வகையில் அமைந்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகு, கேதுவை மட்டும் ஏன் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்? முக்கிய தகவல்..!

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (11.06.2025)!

மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (10.06.2025)!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டும் வைகாசி விசாகம்.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments