Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் தேங்காய் உடைப்பதன் தத்துவம் ...

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (18:31 IST)
தேங்காய் மேல் இருக்கும் மட்டை தான் மாயை மலம் எனப்படுகிறது. மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம  மலம் வரும். கன்ம மலம் நீக்கப்பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும் ஓடு தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும். ஓட்டை  உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பருப்பு தெரியும்.
 
 
இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள். ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களையும் விரட்டினால் தான் பேரின்பத்தை பெறமுடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தத்துவமாக சொல்லப்படுகிறது.
 
தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது. தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடையாளமாகும். தன்னை சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது.
 
அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம்.  ஆனால் மனம் பக்குவம் பெறும்போது நமது உடம்பு சாசுவதமானது அல்ல என்பது புரியும். அதாவது இளநீர் வற்றும் போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை. மாறாக  உறுதி பெறும். அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித்திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை  துறந்து பக்குவப்படுகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான சிவகிரி முருகன் கோவில்.. வேண்டும் வரம் கிடைக்கும்..!

இந்த ராசிக்காரர்கள் வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (21.03.2025)!

பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்.. ஆச்சரிய தகவல்..!

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டகால தொல்லைகள் விலகும்! - இன்றைய ராசி பலன்கள் (20.03.2025)!

திருப்பரங்குன்றம் கோவிலில் தேர்த்திருவிழா.. அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments