Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசி அமாவாசை .! ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்.!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:45 IST)
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள 72 அடி உயர ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
முன்னதாக தில்லை காளியம்மனுக்கு சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், அம்மன், பச்சைக்காளி ஆகிய வேடமிட்டு பம்பை இசை முழங்க காளி நடனம் நடைபெற்றது.
 
மாசி மாதத்தில் நடைபெறும் மயான கொள்ளையின் போது ஆக்ரோஷத்துடன் அம்மன் சூரனை வதம் செய்வதை  நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இதனை கோயிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர் பின்னர் தில்லை காளி அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ALSO READ: தன்னை நம்பி வந்த தொண்டர்களை கைவிட்ட கமலஹாசன்..! அண்ணாமலை கடும் விமர்சனம்..!!
 
இறுதியில் 72 அடி உயர தில்லை காளியம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments