கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (13:51 IST)
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
திருப்புத்தூரில் பழமையான அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது கோவில் திருப்பணிகள் முடிவடைந்து பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது.

அன்று இரவு முதற்காலை யாக சாலை பூஜை தீபாராதனை நடைபெற்று பிப்ரவரி 19 காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை, பிப்ரவரி 20ஆம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 
 
பிப்ரவரி 21ம் தேதி  காலை 6 மணிக்கு 6ஆம் கால யாக சாலை பூஜை மற்றும் கோ பூஜை கடம் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் விமான கலசங்களுக்கு  சிவாச்சாரியார்கள் யாகசாலையை வளம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ: இடைநிலை ஆசிரியர்கள் கைதுக்கு கண்டனம்..! திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.! டிடிவி தினகரன்..!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

அடுத்த கட்டுரையில்
Show comments