Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வது ஏன் தெரியுமா...?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (05:59 IST)
பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.


சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவ மூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

வைகாசி விசாகம்: முருகன் அருளை பெற செய்ய வேண்டிய விரதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான பண உதவி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன் (20.05.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (19.05.2024)!

வைகாசி விசாகத்தின் சிறப்புகள் என்னென்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன் (18.05.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments