Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (22:16 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 3  ஆம் தேதி பங்குனி மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் 3 ஆம் தேதி திங்கட்கிழமை கிழமை முதல்  6 ஆம்  ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றாலும், இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை என்றும்,  நீரோடையில் குளிக்கூடாது என்று வனத்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன்கள் (12.07.2025)!

ஆடி மாதம்: சுமங்கலி பூஜைக்கான வழிபாட்டு முறைகள் மற்றும் முக்கிய மந்திரங்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் வசூலாகும்! இன்றைய ராசி பலன்கள் (11.07.2025)!

காரைக்காலில் களைகட்டிய மாங்கனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு பிச்சாண்டவர் ஊர்வலம்!

இந்த ராசிக்காரர்கள் பிறருடன் கவனமாக பழகுவது அவசியம்! இன்றைய ராசி பலன்கள் (10.07.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments