Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலட்சுமி பூஜை செய்வதால் இத்தனை அற்புத பலன்களை பெறமுடியுமா...?

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:11 IST)
வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.


வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம். லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.

வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மேஷம்

300 ஆண்டுகள் பழமையான ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில்: சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்

இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தரும்! இன்றைய ராசி பலன்கள் (15.08.2025)!

வள்ளலார்: சாகா கல்வி கற்றுத் தந்த சன்மார்க்கப் பெரியார்

இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்! இன்றைய ராசி பலன்கள் (14.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments