Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான்.. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்..!

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (18:52 IST)
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு மாதம் என்பதால் அந்த மாதத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் அம்மன் வீற்றிருகும் பல கோயில்களில் வித விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷம் பக்தியுடன் எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் சக்தி வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது என்பதால் ஆதி காலத்தில் இருந்தே தாய்மையை போற்றும் இந்த அம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
 
கடவுளாகவும் அன்னையாகவும் குருவாகவும் அம்மனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பார் என்றும் அம்மனுக்கு நன்றி சொல்லும் மாதமாகவே ஆடி மாதம் கருதப்படுகிறது.
 
ஆடி மாதம் முழுவதும் அம்மனின் மலர் பாதங்களில் நமது எண்ணமான அனைத்தையும் குவித்து வைத்தால், அம்மனிடம் முழுமையாக சரண் அடைந்தால், உடல் பொருள் ஆன்மா அனைத்தையும் அம்மன் காலடியில் ஒப்படைத்தால், குடும்பத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.
 
எனவே மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும் அம்மனை ஆடி மாதம் முழுவதும் வழிபடுவோம் சகல நன்மைகளையும் பெறுவோம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மகரம்

இந்த ராசிக்காரர்கள் உதவி செய்வதில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள் (17.08.2025)!

இன்று கிருஷ்ண ஜெயந்தி.. கிருஷ்ணரை ஐதீகப்படி வழிபடுவது எப்படி?

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – தனுசு

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – விருச்சிகம்

அடுத்த கட்டுரையில்
Show comments