இயற்கையான முறையில் சருமத்துளைகளை சரிசெய்யும் வழிமுறைகள் !!

Webdunia
சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். இதனை இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்.


ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து உங்கள் கழுத்திலிருந்து தலை வரை ஒரு கனமான போர்வையால் மூடி பாத்திரத்தில் வெளிவரும் ஆவியில் முகத்தை காட்டவேண்டும். முகத்தில் அதிக நீர் வெளியேறும். இவை எல்லாமே சருமத்தில் இருக்கும் அழுக்குகளே.
 
எலுமிச்சை சாறு ஒரு பங்கு சேர்த்து அதனில் மூன்று பங்கு வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து அதன் சாறில் பஞ்சு உருண்டையை நனைக்கவும் இதை  முகம் முழுக்க தடவி 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
 
வாழைப்பழத்தோலை எடுத்து சருமத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்தால் முகத்தில் திறந்திருக்கும் துளைகள் பெருமளவு சுருங்கிவிடும்.
 
ஐஸ்கட்டியை எடுத்து சுத்தமான துணியில் சுற்றி முகத்தில் நன்றாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். தினமும் இரண்டு முறை செய்து  வந்தால் நல்ல பலன் தெரியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments