Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அழகை பராமரிக்க சில டிப்ஸ் !!

Webdunia
அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இப்போது எந்த பொருட்கள் சருமத்தின் அழகை பாதுகாக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுடன் இருக்கும்.
 
கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சேர்த்து நன்மை பயக்கும். கடலையை அரைத்து  முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.
 
தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகத் திகழ்கிறது.  தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத்தொல்லையில் இருந்தும் விடுதலை தரும்.
 
எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும்.
 
தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது வறண்ட, எண்ணெய் பசையுள்ள என எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், லெமன், கடலைமாவு, தக்காளி, ஓட்ஸ் என எவற்றுடனும் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யோகா பயிற்சிக்கான சரியான நேரம் மற்றும் வழிமுறைகள்!

இறைச்சி உணவு: உடலுக்கு நல்லதுதான், ஆனால் அளவோடு! சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன?

குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிட சில எளிய வழிகள்!

பால் சேர்க்காத பிளாக் காபி: அதிகாலையில் அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும் பழங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments