Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருமையான அடர்த்தியான கூந்தலை பெற சில இயற்கை முறையிலான அழகு குறிப்புகள் !!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (14:34 IST)
பெண்களுக்கு அழகு சேர்ப்பது அழகான, அடர்த்தியான, கருமையான, நீளமான கூந்தலாகும்.


தேவையானப் பொருட்கள்: தேங்காய் எண்ணெய் 1லிட்டர், விளக்கெண்ணெய் கால் லிட்டர், வசம்புப்பொடி 5 கிராம், கரிசலாங்கன்னி பொடி 5 கிராம், நெல்லிக்காய் பொடி 5 கிராம், கருவேப்பிலை பொடி 5 கிராம், மருதாணி பொடி 5 கிராம், அரோமா ஆயில் 2 சொட்டு, காட்டன் துணி ஆகியவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

செய்முறை: ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் கால் லிட்டர் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலக்கவும். மேலே கூறிய அனைத்து பொடிகளையும் தனித்தனியாக காட்டன் துணியில் சிறு மூட்டைகளாக கட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கலந்து வைத்துள்ள எண்ணெயில் 2 சொட்டு அரோமா ஆயிலை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். காட்டன் துணியில் கட்டி வைத்துள்ள சிறு மூட்டைகளை எண்ணெயில் மூழ்குமாறு வைக்கவும். அப்படியே ஒரு வாரம் நன்கு ஊற வேண்டும்.

ஒரு வாரம் முடிந்த பிறகு மூட்டைகளை எடுத்து விடவும். அந்த பொடியின் தன்மை அனைத்தும் எண்ணெயில் இறங்கி கலந்து இருக்கும். அந்த எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து சூடு செய்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்.

பிறகு 1 மணி நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால், முடி உதிர்வு நின்று நல்ல அழகான, கருமையான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments