Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான சில அழகு குறிப்புக்கள் !!

Webdunia
மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய எளிமையான  அழகு குறிப்புக்களை பார்ப்போம்.

முகம் பொலிவு பெறுவதற்கு, சந்தனத் தூள்1 தேக்கரண்டி, ரோஜா, பன்னீர் 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
 
ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு, ஓட்ஸ் 2 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, தேன் 1 தேக்கரண்டி, தயிர் 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
மிருதுவான சருமத்திற்கு, ஸ்ட்ராபெர்ரி பழம் 2 (அரைத்தது), முல்தானிமெட்டி 2 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments