மைதமாவு இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.
பின்னர் கழுத்து, கை, பாதங்கள் ஆகியவற்றில் இதனைப் பயன்படுத்தலாம்.
பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்த்து விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். பின்னர் பார்த்தால் முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.