Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தில் உள்ள கருமையை போக்கும் இயற்கை அழகு குறிப்புகள்....!!

Webdunia
தக்காளி சாற்றை நன்கு முகத்தில் தடவி சிறிது மசாஜ் செய்து நன்கு ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்து வந்தால் முகத்தில் சேரக் கூடிய அழுக்கை நீக்கி முகம் பளிச் என காணப்படும்.
தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.  இவ்வாறு செய்தால் முகத்தில் பலவகையான மாற்றங்கள் ஏற்படும்.
 
எலுமிச்சை சாறு எடுத்து அதனை சிறிது தண்ணீரில் கலந்து அதனை தூங்கப் போகும் முன்பு முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். இவ்வாறு செய்வதனால் சருமத்தின் நிறம் நன்றாக மாறும்.
 
உருளைக்கிழங்கை வாரத்திற்கு ஒரு முறையாவது அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  இவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
 
பப்பாளியை அரைத்து அதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால்  நமது சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை அகலும். அதுமட்டுமின்றி முகம் பார்ப்பதற்கு பளபளவென்று இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments