Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் இரவு தூங்குவதற்கு சருமத்தை இவ்வாறு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

Webdunia
இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் சிவப்பாக மாறும்.
இரவு தூங்குவதற்கு முன் வெள்ளரிச் சாறில், சிறிதளவு பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வர சருமம் சிவப்பாக காணப்படும்.
 
இரவு தூங்குவதற்கு முன் உருளைக்கிழங்கை சாறு எடுத்து அவற்றை சருமத்தில் அப்ளை செய்து கழுவி வர, சருமம் பளபளப்பாக  காணப்படும்.
 
ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. எனவே இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் பால்  சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு  புத்துணர்ச்சி அளிக்கப்படுவதால், சருமம் அழகாக காணப்படும்.
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவவேண்டும்.
 
அரை ஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்யவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம்  அழகாக காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments