முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் அற்புத குறிப்புகள் !!

Webdunia
பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு.


முகத்தில் முடிகளைப் பார்த்ததும் அதிக  பெண்கள் செய்யும் தவறு உடனடியாக நீக்கி விடவேண்டும் என்று கண்ட சிகிச்சைகளையும் மேற்கொள்வதுதான்.
 
சிலர் முடியைக் கண்டதும் உடனடியாக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் என்று முடிகளை அகற்ற விருக்கும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு அப்போது நிம்மதி அடைந்தாலும் இதற்கு ஆயுள் கிடையாது.
 
முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் படுக்கப் போகும்முன் முகத்தில் பூசிக்கொண்டு  படுக்கவும். காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவினால் படிப்படியாக முகத்தில் உள்ள முடிகள் மறைந்துவிடும்.
 
மஞ்சளுடன் பப்பாளிப் காயையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் விழுந்து முகம் பொலிவு பெறும்.
 
பசும்பாலுடன் பாசிப்பயறு தோலைக் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள்  அனைத்தும் நீங்கும். தொடர்ந்து இந்த முறைகளை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments