Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (18:59 IST)
முந்திரி பழம் கோடைக் காலத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு சத்தான பழம் ஆகும். இது சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த தனித்துவமான சுவையைக் கொண்டது. மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழம் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
 
முந்திரி பழத்தில் வைட்டமின் C, இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் அடங்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம் செல் அழிவைத் தடுக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட இந்த பழம், செரிமானத்திற்கு உகந்ததாகவும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் உதவியாக இருக்கிறது.
 
முந்திரி பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மேலும், எலும்புகளின் வலிமை உயரும், இரத்த சோகை குறையும், உடலின் வெப்பம் தணையும். இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
மொத்தமாக, கோடையில் உடலுக்கு தேவைப்படும் ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் வழங்கும் இயற்கை உண்டியல் என்றே முந்திரி பழத்தை கூறலாம்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments