Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

Mahendran
புதன், 11 டிசம்பர் 2024 (13:47 IST)
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் உடல் வலி சோர்வுடன் இருப்பதால் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் மாதவிடாய் காலங்களில் நடை பயிற்சி செய்வது மனநிலை மேம்பாட்டுக்கு உதவும் என்றும், மன அழுத்தம் குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
பெண்கள் மாதவிடாய் காலங்களில் நடைப்பயிற்சி செய்வது மட்டுமின்றி எளிமையான சில உடற்பயிற்சிகளும் செய்யலாம் என மகளிர் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மிகவும் கவனமாக நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
மாதவிடாய் காலங்களில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும் என்றும், ரத்த போக்கை திறம்பட நீக்குகிறது என்றும், உடல் வீக்கம் ஏற்படுவதை தடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பதால் மன அழுத்தம், எரிச்சல் ஏற்படும். இந்த நாட்களில் நடை பயிற்சி மற்றும் எளிமையான உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும். வீட்டுக்குள்ளே இருப்பதை விட பூங்கா, வயல்வெளி போன்ற இடங்களில் நடைப்பயிற்சி செய்வது மேலும் பலன்களை தரும்.
 
இவ்வாறு நடைப்பயிற்சி செய்வது மாதவிடாய் காலங்களில் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரிதும் உதவியாக அமைகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments