Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சில எளிய டிப்ஸ் !!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:53 IST)
வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் அதிக நீரை பருகுவது மிகவும் முக்கியமானது ஒன்றாகும். வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும்.
 
 
இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள்,வழிகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும்வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும்.
 
ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும்.
 
தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது.
 
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும். இந்த கலவையை கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் அதிக நீரை பருகுவது மிகவும் முக்கியமானது ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆரோக்கியமான சுவையான மாம்பழ கேசரி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!.

அடுத்த கட்டுரையில்
Show comments