Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (21:22 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் இதனை அடுத்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து இந்நோயை கட்டுப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம். மெட்ராஸ் ஐ வந்தால் கண்கள் சிவப்பு நிறமாக மாறும் என்றும் கண்களில் இருந்து நீர் வடியும் என்றும், கண்களில் லேசாக எரிச்சல் மற்றும் உறுத்தல் இருப்பதே அதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சோப்பு நீரில் கழுவினால் நல்லது. மேலும் கைகளை சானிடைசர் பயன்படுத்தி கழுவினால் இன்னும் நல்லது.
 
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருக்கும்
 
அதே போல் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும்
 
மேலும் கண்களை கைகளால் தொடவோ கசக்கவோ கூடாது என்பது முக்கியமான ஒரு அம்சம் ஆகும் . மேலும் மெட்ராஸ் ஐ நோயின் பாதிப்பு மூன்று நாள்களுக்கு மேல் பாதித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடதக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!

பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை குறைவாக இருக்கலாம்.. என்ன காரணம்?

நெஞ்சுவலிக்கு காரணம் வாய்வா, மாரடைப்பா: எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது?

அடுத்த கட்டுரையில்
Show comments