Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (21:22 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் இதனை அடுத்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து இந்நோயை கட்டுப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம். மெட்ராஸ் ஐ வந்தால் கண்கள் சிவப்பு நிறமாக மாறும் என்றும் கண்களில் இருந்து நீர் வடியும் என்றும், கண்களில் லேசாக எரிச்சல் மற்றும் உறுத்தல் இருப்பதே அதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சோப்பு நீரில் கழுவினால் நல்லது. மேலும் கைகளை சானிடைசர் பயன்படுத்தி கழுவினால் இன்னும் நல்லது.
 
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருக்கும்
 
அதே போல் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும்
 
மேலும் கண்களை கைகளால் தொடவோ கசக்கவோ கூடாது என்பது முக்கியமான ஒரு அம்சம் ஆகும் . மேலும் மெட்ராஸ் ஐ நோயின் பாதிப்பு மூன்று நாள்களுக்கு மேல் பாதித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடதக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments