Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் வடியும் முகமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (14:05 IST)
உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரித்துக்கொள்ளலாம்.
 
எண்ணெய் சருமத்தை பெற்றவர்களுக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும். இதை தவிர்க்க பின்வரும் சிலவற்றை பின்பற்றுங்கள்... 
 
# தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும். 
 
# முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அதிலும், தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்வது நல்ல பலனளிக்கும். 
 
# வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.
 
# வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி சாறு எடுத்தும் பயன்படுத்தலாம்.
 
# பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவல் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
 
# சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், எண்ணெய் பசை நீங்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments