காலில் பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:49 IST)
காலில் பித்தவெடிப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தற்போது பார்ப்போம். 
 
காலில் செருப்பு அணியாமல் கரடு முரடான பாதையில் நடப்பவர்களுக்கு காலில் பித்த வெடிப்பு வருவது வழக்கம். மேலும் அழுக்கு தேய்த்து குளிக்காமல் இருப்பது, குதிகாலில் அழுக்கு சேர்வது போன்ற காரணத்தினாலும் பித்தவெடிப்பு வரலாம்.
 
அதுமட்டுமின்றி நீண்ட நேரம் தரமற்ற செருப்பு மற்றும் ஷூக்களை பயன்படுத்துவது கால்களை சுத்தமாக கழுவாமல் இருப்பது ஆகியவை காரணமாகவும் பித்தவெடிப்பு வரலாம். 
 
இந்த நிலையில் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கால்களை நன்றாக கழுவ வேண்டும், குளிக்கும்போது கால்களுக்கு தனி கவனம் செலுத்தி நன்றாக கழுவ வேண்டும் ,வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், கீரை பயறு மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்தால் காலில் உள்ள பித்தவெடிப்பு படிப்படியாக மறைந்து விடும். இதற்கு மேலும் காலில் பித்த வெடிப்பு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

அடுத்த கட்டுரையில்
Show comments