Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா கொய்யா இலை...?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:39 IST)
கொய்யாவின் இலைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டவை.
 
கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவற்றை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதால் வயிற்று வலி நீங்கும். வாந்தி சங்கடமும்  சரியாகும். இதற்கு, நீங்கள் கொய்யாவின் 5-6 இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி அதன் தண்ணீரை குடிக்க வேண்டும்.
 
மூட்டு வலிக்கும் கொய்யா இலைகள் நன்மை பயக்கும். கொய்யா இலைகளை அரைத்து, விழுதாக்கி அதை மூட்டுகளில் தடவ வேண்டும். இதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
 
கொய்யா இலைகளின் நீர், நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது  தவிர, உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதையும் இது தடுக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.
 
கொய்யா இலைகளின் நீர் பல்வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. கொய்யா இலைகளை வேகவைத்து, அவற்றை தண்ணீரில்  கலந்தது, வடிகட்டி அதை ஈறு மற்றும் பல்லில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். 
 
இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாய் கொப்பளித்தாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments