Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாலயா‌வி‌ன் இலவச க‌ண் ‌சி‌கி‌ச்சை முகா‌ம்

சேவாலயா‌வி‌ன் இலவச க‌ண் ‌சி‌கி‌ச்சை முகா‌ம்
, வியாழன், 21 ஜூன் 2012 (18:06 IST)
FILE
சேவாலயா அற‌க்க‌ட்டளை‌ சா‌ர்பாக த‌ிருவ‌‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ன்று இலவச க‌ண் ‌சி‌கி‌ச்சை முகா‌ம் நடைபெ‌ற்றது.

இன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பேரத்தூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் இ‌ந்த சிறப்பு கண் சிகிச்சை முகாம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

இம்முகா‌மி‌ல் சென்னை முக‌ப்பேரில் அமைந்துள்ள ப்ரணவ் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த கண் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தில் அவர்களின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பேரத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 136க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 22 பேர் கண் புறை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ட‌‌‌றியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின் இம் முகாமில் கலந்து கொண்ட 18 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்ட்து.

இம்முகாமினை பேரத்த்தூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் செல்வி. ஆ.திவ்யபாரதி அவர்கள் துவக்கி வைத்து முகாமிற்கான் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil