உடலுக்கு பலம் தரும் சூப்கள் - 2
, வெள்ளி, 14 ஜூன் 2013 (17:40 IST)
உடலுக்கு பலம் தரும் சூப்கள் வரிசையில் ஆவாரம் பூ மற்றும் முடக்கற்றான் சூப்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களைப் பார்ப்போம்.அழகை வர்ணிக்க 'ஆவாரம் பூவே' என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்க பஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.ஆவாரம் பூ சூப்:தேவையான பொருட்கள்:ஈர ஆவாரம்பூ - 1 கப்(
அ) உலர்ந்த ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்தண்ணீர் - 250 மிலிகேரட் - 1பீன்ஸ் - 5தக்காளி - 1வெங்காயம் - சிறிதுஇஞ்சி - சிறிதுபூண்டு - 2 பல்கொத்தமல்லி, புதினா - சிறிதுமிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவுசெய்முறை:கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
முடக்கற்றான் அதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.முடக்கற்றான் சூப்:தேவையான பொருட்கள்:முடக்கற்றான் கீரை - 1 கப்துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்மிளகு - 1 டீஸ்பூன்சீரகம் - 2 டீஸ்பூன்எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்மிளகாய் வற்றல் - 3புளி - எலுமிச்சை அளவுபெருங்காயம் - சிறிதளவுபூண்டு - 1உப்பு - தேவையான அளவுசெய்முறை:கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.