Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில் இருந்து மோர்பின்

Webdunia
வியாழன், 21 மே 2015 (09:12 IST)
ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து பெரும்பாலும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட், சர்க்கரையில் இருந்து மோர்பினை உருவாக்குவதற்கான அனைத்துவிதமான சிக்கலான படிமுறைகளையும் செய்வதாக ''நேச்சர் கெமிக்கல் பயோலஜி'' என்னும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு கூறுகின்றது.
 
ஓப்பியம் போதைப்பொருளில் இருந்து மோர்பின் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக இதனை பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
தற்போது ஓப்பியம் தாவரங்களில் இருந்துதான் மோர்பின் தயாரிக்கப்படுகின்றது.
 
ஹெரோயின் போதைப்பொருளும் இந்த வழியிலேயே உருவாக்கப்படலாம் என்பதால், இந்த முறை சட்ட விரோத போதைப்பொருளை வீட்டிலேயே உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments